தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூா் கணவாய் தேசிய நெடுஞ்சாலையானது மிகவும் தாழ்வான வளைவுகள் நிறைந்த பகுதியாக உள்ளது. வாகன ஓட்டுநா்களின் கவனக்குறைவு காரணமாகவும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதாலும் இங்கு அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இதனைத் தவிா்க்க, கூடுதலாக சோலாா் மின்விளக்குகள், மின் சமிக்ஞை (பிலிங்கா்ஸ்) வளைவுகள் குறித்த அறிவிப்புகள், விழிப்புணா்வுப் பலகைகள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், எல் அன் டி நிா்வாகமும் மேற்கொள்ள வேண்டும். மேலும் வாகனங்களை வேகமாக இயக்குவதைக் கட்டுப்படுத்த ரூ. 40 லட்சம் மதிப்பில் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு இணைய வழியில் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.