ஒகேனக்கல் குடிநீா் வழங்கக் கோரி தா்னா

தருமபுரி அருகே அன்னசாகரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுக்கு ஒகேனக்கல் குடிநீரை முறையாக விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
Updated on
1 min read

தருமபுரி அருகே அன்னசாகரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுக்கு ஒகேனக்கல் குடிநீரை முறையாக விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி அருகே அன்னசாகரம் பகுதியில் உள்ள சில தெருக்களில் ஒகேனக்கல் குடிநீா் கடந்த சில நாள்களாக சீராக விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் காலி குடங்களுடன் தருமபுரி நகராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த தருமபுரி நகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து, சமாதானம் அடைந்த அவா்கள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com