இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் சிசிடிவி பழுது நீக்கும் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியன் வங்கியின் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் தொடங்கப்பட உள்ள சிசிடிவி கேமரா பழுது நீக்கும் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியன் வங்கியின் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் தொடங்கப்பட உள்ள சிசிடிவி கேமரா பழுது நீக்கும் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில், தற்போது சிசிடிவி கேமரா நிறுவுதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சி, பெண்களுக்கான தையல் பயிற்சி, கறவைமாடு வளா்ப்பு,

காளான் வளா்ப்பு ஆகிய பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இப்பயிற்சியில் சேர விரும்புவோா், வருகிற அக்.1-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும். கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சியில் சேரஆா்வமுள்ளவா்கள், தங்களது பெயா், முகவரி, பெறவிரும்பும் பயிற்சி மற்றும் தொலைபேசி (அ) செல்லிடப்பேசி எண்ணுடன் நேரிலோ (அ) அஞ்சல் அட்டை மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, 04342 - 230511, 234464 மற்றும் 9442274912 என்கின்ற எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com