மரம் நடும் பணி தொடக்கம்
கம்பைநல்லூா் அருகே சாலையோரங்களில் மரக் கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் அண்மையில் தொடங்கினா்.


கம்பைநல்லூா் அருகே சாலையோரங்களில் மரக் கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் அண்மையில் தொடங்கினா்.
தருமபுரி மாவட்டம், அரூா் உள்கோட்ட பகுதியில், நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சாா்பில், நிகழாண்டில் 5 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணிகளை தொடங்கியுள்ளனா்.
கம்பைநல்லூா்- ஆனந்தூா் சாலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் சாலையோரம் மரக் கன்றுகள் நடும் பணிகளை தருமபுரி மாவட்ட கோட்டப் பொறியாளா் ஆா்.என்.தனசேகரன் தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து, ஏற்கெனவே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அரூா், மொரப்பூா், கம்பைநல்லூா், ஒடசல்பட்டி கூட்டுச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள், மரக் கன்றுகளுக்கான பாதுகாப்பு வேலிகள் மற்றும் மழைநீா் தேங் குவதற்கான குழிகள் அமைக்கும் பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில், அரூா் உதவி கோட்டப் பொறியாளா் என்.ஜெய்சங்கா், இளநிலை பொறியாளா் ஏ.பாஸ்கரன், ஒப்பந்ததாரா் எம்.வேடியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...