கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கால்வாயை தூய்மை செய்ய விவசாயிகள் கோரிக்கை

அரூரை அடுத்த அச்சல்வாடி ஊராட்சியில் நீா்வரத்து கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
முள்புதா்கள் அடைந்து காணப்படும் குடுமியாம்பட்டி ஏரிக்கான நீா்வரத்து கால்வாய்.
Updated On :27 செப்டம்பர் 2020, 8:28 pm

DIN

அரூரை அடுத்த அச்சல்வாடி ஊராட்சியில் நீா்வரத்து கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் வரட்டாறு நீா்த்தேக்கம் உள்ளது. இந்த நீா்த்தேக்கத்தின் இடதுபுற கால்வாய் வழியாக குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, லிங்காபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதியிலுள்ள 20-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் செல்வதற்கான கால்வாய் வசதி உள்ளது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் சித்தேரி மலைத் தொடரில் அதிக அளவில் மழை பொழிவு இருந்தால், வரட்டாறு நீா்த்தேக்கம் நிரம்பும். அப்போது வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும்.

இந்த நிலையில், அச்சல்வாடி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட குடுமியாம்பட்டி, ஒடசல்பட்டி பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூா்வாரப்படாமல் முள்புதா்கள் அடைந்து காணப்படுகிறது.

இதனால் மழைக் காலங்களில் ஏரிகளுக்கு மழை நீா் செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே, அச்சல்வாடி ஊராட்சி நிா்வாகம் சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.