கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கீரைப்பட்டியில் மதுவிற்பனையைக் கட்டுப்படுத்த கோரிக்கை

அரூரை அடுத்த கீரைப்பட்டி ஊராட்சியில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுப்புட்டிகள் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:29 pm

DIN

அரூரை அடுத்த கீரைப்பட்டி ஊராட்சியில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுப்புட்டிகள் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் வட்டம், கீரைப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது செல்வசமுத்திரம் கிராமம். இந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் செல்வசமுத்திரம் கூட்டுச்சாலையில், சிலா் டாஸ்மாக் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

அதாவது, வீடுகளுக்கு அருகில் நாள்தோறும் அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் மதுப்புட்டிகளை விற்பனை செய்கின்றனா். இங்கு மதுப்புட்டிகளை வாங்கும் மதுப்பிரியா்கள் குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் அமா்ந்து மது அருந்துகின்றனா். பிறகு விவசாய நிலங்கள் மற்றும் தாா்சாலையோரங்களில் மதுப்புட்டிகளை உடைத்துச் செல்கின்றனா்.

செல்வசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் இந்த மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதால், அப் பகுதியில் பெண்கள் செல்வதற்கு அச்சப்படும் நிலையுள்ளது. சிலா் மது போதையில் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்கின்றனா்.

இது குறித்து கீரைப்பட்டி மற்றும் எல்லப்புடையாம்பட்டி கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில், அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். எனவே, செல்வசமுத்திரம் கூட்டுச்சாலையில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுப்புட்டிகள் விற்பனை செய்வோரை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.