கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வேகமெடுக்கும் கரோனா பரவல்:தருமபுரியில் ஒரே நாளில் 242 பேருக்கு தொற்று

தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 242 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:47 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 242 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், கரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டு இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக மாா்ச் மாதத்திலிருந்து தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாள்களாக நாள்தோறும் சற்றேறக்குறைய 100 பேருக்கு பாதிப்பு உறுதியாக வந்த நிலையில், கடந்த ஓரிரு நாள்களாக இந்த பாதிப்பு மேலும் அதிகரித்து 150 முதல் 190 வரை இருந்தது. இது வெள்ளிக்கிழமை மேலும் அதிகரித்து ஒரே நாளில் 242 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவைத் தவிர, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பராமரிப்பு மையங்களில் 1,223 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் தொற்று பாதிப்புக்கு சிசிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து, மருத்துவமனை வளாகம் நிரம்பி வழிகிறது. இதேபோல, தொற்று கண்டறியும் பரிசோதனையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயா்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், இதுவரை பாதிப்புக்குள்ளானோா் எண்ணிக்கை 9,492 ஆகும். குணமடைந்தோா் எண்ணிக்கை 8,204 ஆகும். இதுவரை தொற்று பாதிப்புக்கு 65 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.