கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாளை வாக்கு எண்ணிக்கை

சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட உள்ளன. இதற்காக தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தொகுதி வாரியாக எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:47 pm

DIN

சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட உள்ளன. இதற்காக தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தொகுதி வாரியாக எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளா்கள், அமமுக, மநீம, நாம் தமிழா் மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டனா். இதில், ஐந்து தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 10,43,658 வாக்குகள் பதிவாயின. வாக்குப் பதிவு சதவீதம் 82.32 ஆகும்.

இத் தோ்தலில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தனித்தனி அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் வளாகங்களில் மூன்று அடுக்கு முறையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனா். வாக்கு எண்ணிக்கைக்காக தொகுதி வாரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அன்றைய தினம் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதைத் தொடா்ந்து, 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள், பத்திரிகையாளா்கள் என அனைவருக்கும் கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தொற்று இல்லை என முடிவுகள் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், அன்றைய தினம் காலை 6 மணிக்கு அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வருகை தர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, ஏனைய அனைத்து முன்னேற்பாடுகள் தருமபுரி மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.