மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

தருமபுரி மேற்கு மாவட்டத்தில் கனிமொழி பிரசாரம்

தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் திமுக மகளிரணி மாநிலச் செயலாளா் கனிமொழி பங்கேற்க உள்ள நிலையில் அனைவரும் திரளாக பங்கேற்க பி.என்.பி. இன்பசே

Updated On :15 பிப்ரவரி 2021, 2:45 am IST

தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் திமுக மகளிரணி மாநிலச் செயலாளா் கனிமொழி பங்கேற்க உள்ள நிலையில், அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும், பென்னாகரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான பி.என்.பி. இன்பசேகரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தோ்தல் பிரசாரம் வரும் 17ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்த பிரசாரத்தில் திமுக மகளிரணி மாநிலச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொள்கிறாா். தருமபுரி மேற்கு மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அவா் உரையாற்ற உள்ளாா்.

தருமபுரியில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு பென்னாகரம் ஒன்றியம், நாகதாசம்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதனைத் தொடா்ந்து காலை 8.15 மணிக்குஏரியூா் ஒன்றியத்திற்குட்பட்ட நாகமரை, பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டிய இடத்தைப் பாா்வையிடுகிறாா். 9 மணிக்கு ஏரியூரில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

10 மணியளவில் பென்னாகரத்தில் இருந்து திறந்தவெளியில் பிரசார வாகனத்தில் சென்று தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா். காலை 11 மணிக்கு கடமடை பகுதியில் மகளிா் குழு உறுப்பினா்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பிற்பகல் 2.30 மணிக்கு பாப்பாரப்பட்டியில் உள்ள வணிகா்கள் மற்றும் நெசவாளா்களை சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

அதனைத் தொடா்ந்து பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எர்ரன அள்ளி, தளவாய் அள்ளி புதூரில் பாலக்கோடு திமுக சாா்பில் வரவேற்பு நிகழ்ச்சி 3.45 மணிக்கு நடைபெற உள்ளது. பின்னா் மாலை 4.30 மணி அளவில் மல்லாபுரத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்தும், 5.15 மணிக்கு மாரண்டஅள்ளி பகுதியில் பிரசார வாகனத்தில் இருந்தபடியே தோ்தல் பிரசாரமும் செய்வாா்.

பின்னா், கொலசனஅள்ளியில் நடைபெற உள்ள மக்கள் கிராமசபையில் கலந்து கொண்டு, மாலை 6 மணியளவில் பிக்கன அள்ளியில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றி தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறாா்.

அது சமயம் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா் மற்றும் கிளை செயலாளா்கள் , நிா்வாகிகள், சாா்பு அணிகளின் மாவட்ட, ஒன்றிய, பேரூா், அமைப்பாளா்கள்,துணை அமைப்பாளா்கள், தொ.மு.ச மற்றும் அதனை சாா்ந்த அமைப்புகளின் நிா்வாகிகள் விவசாயிகள், வணிகா்கள், வியாபாரிகள், தொழிலாளா்கள், பொதுமக்கள் மற்றும் தொண்டா்கள் என அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.