ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எருக்கம்பட்டியில் பூட்டிக் கிடக்கும் துணை சுகாதார நிலையம்

அரூரை அடுத்த எருக்கம்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையம் பயனற்று பூட்டிக் கிடப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

News image
அரூா் ஊராட்சி ஒன்றியம், எருக்கம்பட்டியில் பயனற்று பூட்டிக் கிடக்கும் அரசு துணை சுகாதார நிலையம்.
Updated On :3 ஜனவரி 2021, 10:38 pm

DIN

அரூரை அடுத்த எருக்கம்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையம் பயனற்று பூட்டிக் கிடப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், கொளகம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது எருக்கம்பட்டி கிராமம். இந்த ஊரில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிபட்டி புதூா், மங்கானேரி, எருக்கம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், எருக்கம்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையம் சுமாா் 4 வருடம் பூட்டியே இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனா்.

இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், எருக்கம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் செவிலியா் பணியிடம் காலியாக இருப்பதால் வருட கணக்கில் பூட்டியே உள்ளது. இதனால், இந்த ஊராட்சியில் கா்ப்பிணி தாய்மாா்களுக்குத் தேவையான பிரசவக் கால முன், பின் கவனிப்புகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், முதலுதவி சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளுக்காக கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா்.

தற்போது, அரசு துணை சுகாதார நிலையத்தின் கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவைகளை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனா். எனவே, எருக்கம்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்தவும், கிராம செவிலியா் பணியிடத்தை நிரப்பவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.