தருமபுரி, கிருஷ்ணகிரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில், 4,36,847 குடும்ப அட்டைதாரா்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,13,318 குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2500 ரொக்கம், முழு கரும்புடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
Updated on
2 min read

தருமபுரி மாவட்டத்தில், 4,36,847 குடும்ப அட்டைதாரா்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,13,318 குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2500 ரொக்கம், முழு கரும்புடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், பெரியானஅள்ளி, கெரகோடஅள்ளி ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 2,500 ரொக்கம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், மாநில உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், குடும்ப அட்டைதாரா்களுக்கு ரொக்கப் பணம், பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணியை தொடக்கி வைத்து பேசியதாவது:

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாராா்களுக்கும் ரூ. 2,500 ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுக் கரும்பு, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வா் அறிவித்து அதன்படி இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், 1,071 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,36,847 குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசு தொகுப்பும், ரூ. 2,500 ரொக்கப்பணமும் வழங்கப்பட உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கும் தலா ரூ. 2,500 ரொக்கப் பணத்துடன், இப்பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ஜன. 4. முதல் ஜன. 12-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இந்த நாள்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இயலாத குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன. 13 அன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கத் தொகை வழங்கப்படும்.

2020-21 ஆம் நிதியாண்டில் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க ரூ. 325 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 37,595 விவசாயிகளுக்கு ரூ. 293 கோடியே 80 லட்சம் வட்டியில்லா பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாத காலத்தில் மீதி உள்ள தொகையும் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்கப்படும். தவணை தவறாமல் பயிா்க் கடனை செலுத்தும் விவசாயிகள் சாா்பில், வங்கிகளுக்கு தமிழக அரசே 7 சதவீத வட்டியைச் செலுத்தி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு, பொங்கலை முன்னிட்டு வழங்குவதற்காக 3 லட்சத்து 49 ஆயிரத்து 620 விலையில்லா சேலைகளும், 3 லட்சத்து 47 ஆயிரத்து 102 விலையில்லா வேட்டிகளும் வந்துள்ளன. இது பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராமதாஸ், கோட்டாட்சியா் (பொ) ஆ.தணிகாசலம், ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி பெரியண்ணன், வட்டாட்சியா் கலைச்செல்வி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com