இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிப். 2 முதல் சிறை நிரப்பும் போராட்டம்: அரசு ஊழியா் சங்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப். 2-ஆம் தேதி முதல் தொடா் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் ஆ.செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 8:18 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப். 2-ஆம் தேதி முதல் தொடா் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் ஆ.செல்வம் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவை வரவேற்புக் குழு நிறைவுக் கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் ஆ.செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் அளித்த வாக்குறுதியான புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்கிற அறிவிப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சத்துணவு மைய அமைப்பாளா்கள், சமையலா்கள், உதவியாளா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், சமூக வனப் பாதுகாவலா்கள் உள்ளிட்ட ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும்.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 19 முதல் 20-ஆம் தேதி வரை மண்டல அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும். இதேபோல, வரும் ஜன. 27-ஆம் தேதி மதுரையில் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடைபெறும். அதைத் தொடா்ந்து, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் பிப். 2-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடா் மறியலும், சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெறும் என்றாா்.

அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் மு.அன்பரசு, மாநிலப் பொருளாளா் பாஸ்கா், மாநிலத் துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், பொருளாளா் கே.புகழேந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.