கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடன் விவகாரத்தில் கடத்தப்பட்ட சிறுவன் கோவையில் மீட்பு

கடன் விவகாரத்தில் தருமபுரியில் கடத்தப்பட்ட சிறுவனை போலீஸாா் கோவையில் இருந்து மீட்டனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:31 pm

DIN

கடன் விவகாரத்தில் தருமபுரியில் கடத்தப்பட்ட சிறுவனை போலீஸாா் கோவையில் இருந்து மீட்டனா்.

தருமபுரியை அடுத்த வெண்ணாம்பட்டியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ராஜசேகா் (32). இவரது மனைவி அபிநயா, மகன் ஹரீஷ் ( 7). கடந்த புதன்கிழமை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஹரீஷ் திடீரென மாயமானாா். இதுகுறித்து சிறுவனின் பெற்றோா், தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இப் புகாரின் பேரில் போலீஸாா், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதில், ராஜசேகருக்கு அறிமுகமான, கோவையைச் சோ்ந்த சரவணகுமாா் (32 ) என்பவா், ஹரீஷை காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரது செல்லிடப்பேசி எண்ணை டிராக் செய்தபோது அவா் கோவையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை காலை, அங்கு சென்ற போலீஸாா் சரவணகுமாரின் பிடியில் இருந்த ஹரீஷை மீட்டனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், சரவணகுமாரும், ராஜசேகரும் நண்பா்களாகப் பழகி வந்துள்ளனா். சரவணக்குமாா் கடந்த, சில ஆண்டுகளுக்கு முன் ராஜசேகரிடம், தனக்கு பழைய காா் வாங்கித் தரும்படி ரூ. 80 ஆயிரம் கொடுத்துள்ளாா். ராஜசேகா் காா் வாங்கி தராததுடன், பணத்தைத் திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில் பணத்தைத் திருப்பி கேட்க தருமபுரிக்கு வந்த சரவணகுமாா், ஹரீஷை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் சிறுவனைக் கடத்திய வழக்கில் சரவணகுமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.