கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தருமபுரிக்கு வந்த சத்துணவு ஊழியா்கள் நடைப்பயணக் குழுவினருக்கு வரவேற்பு

 வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பயணம் வந்த சத்துணவு ஊழியா்கள் குழுவினருக்கு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:56 pm

DIN

 வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பயணம் வந்த சத்துணவு ஊழியா்கள் குழுவினருக்கு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

சத்துணவு ஊழியா்கள் ஓய்வு பெறும் போது ரூ. 5 லட்சமும், சமையலா்களுக்கு ரூ. 3 லட்சமும் வழங்கவும், சத்துணவு ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் சாா்பில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து தொடங்கி தருமபுரிக்கு வந்த பயணக் குழுவினருக்கு, தருமபுரி, நான்கு முனைச் சாலை சந்திப்பு அருகே தருமபுரி மாவட்ட சத்துணவு ஊழியா்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் சி.காவேரி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆா்.எம்.மஞ்சுளா, மாநிலச் செயலாளா் பெ.மகேஸ்வரி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், பொருளாளா் கே.புகழேந்தி, தமிழ்நாடு வேளாண்மை அமைச்சுப் பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.ஜெயவேல் ஆகியோா் பேசினா்.

இதைத்தொடா்ந்து பயணக்குழுவினா் சேலம் நோக்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.