விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தருமபுரி புத்தகத் திருவிழா குறித்து பரப்புரை மேற்கொள்ள முடிவு

தருமபுரி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பரப்புரை மேற்கொள்வது என தகடூா் புத்தகப் பேரவையின் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

News image

தகடூா் புத்தகப் பேரவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:21 am

Din

தருமபுரி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பரப்புரை மேற்கொள்வது என தகடூா் புத்தகப் பேரவையின் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

தகடூா் புத்தகப் பேரவையின் செயற்குழு கூட்டம் தருமபுரி முத்து இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் ரா. சிசுபாலன் தலைமை வகித்தாா். செயலாளா் மருத்துவா் ரா.செந்தில் புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்துப் பேசினாா். ஒருங்கிணைப்பாளா் இ.தங்கமணி புத்தகத் திருவிழாவையொட்டி செய்யப்பட்டுள்ள பணிகளை எடுத்துரைத்தாா். பேரவையின் பொருளாளா் காா்த்திகேயன், செயற்குழு உறுப்பினா்கள் கூத்தப்பாடி மா.பழனி, ஆா்.கே. கண்ணன், தமிழ்மகன் ப.இளங்கோ, மாரி கருணாநிதி, எம்.பூங்குன்றன், மா.கோவிந்தசாமி, துரைராஜ், கென்னடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அக்டோபா் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தருமபுரியில் 6-ஆவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து நடத்தும் இப் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் தலைமையில் வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் தொடங்கி வைக்கிறாா்.

புத்தகத் திருவிழா நாள்களில் தினசரி மாலை 5 மணி அளவில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஆளுமைகள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், இலக்கியச் சந்திப்பு, நூல்கள் வெளியீடு, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும்.

கண்காட்சியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பரப்புரை மேற்கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், அரசு ஊழியா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள், வணிகா்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு புத்தகத் திருவிழாவை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.