பொதுப் பணித்துறை, ஊரக வளா்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும். மழைக் காலங்களில் இதற்கு முன் பயன்படுத்தப்பட்ட சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் பற்றிய விவரங்களை அறிந்திருப்பதோடு அந்த இடங்களில் ஆய்வு செய்து தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய ஏதுவாக வாகனங்கள், குடிநீா் தொட்டிகள், உணவு சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள், சமையல் எரிவாயு அடுப்புகள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.