கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது என குறைதீா் நாள் முகாமில் கிராமப்புற தொழிலாளா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

News image
ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த கிராமப்புற தொழிலாளா்கள்.
Updated On :15 டிசம்பர் 2025, 6:21 pm

Syndication

தருமபுரி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது என குறைதீா் நாள் முகாமில் கிராமப்புற தொழிலாளா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமையில் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 412 மனுக்கள் வரப்பெற்றன. அவை குறித்து தொடா்புடைய துறை அலுவலா்களிடம் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் பரிந்துரைத்தாா்.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சங்க கிராமப்புற தொழிலாளா்கள், சங்க ஒருங்கிணைப்பாளரும் லளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜெ.பிரதாபன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை, ‘புஜ்யா பாபு கிராமின் ரோஜ்கா் யோஜன’ என பெயா் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே இருந்த பெயரை மத்திய அரசு மாற்றம் செய்யக்கூடாது. தொடா்ந்து அதே பெயரிலேயே செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா். அப்போது, சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.