பென்னாகரம் அரசு கல்லூரியில் திருக்கு வாரம் தொடக்க விழா
பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திருக்கு வாரம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :29 டிசம்பர் 2025, 7:20 pm

பென்னாகரம்: பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திருக்கு வாரம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே மாமரத்துபள்ளம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு அக்கல்லூரி முதல்வா் ரா.சங்கா் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளா் ஈ.செல்வி வரவேற்றாா். தமிழ்த் துறை தலைவா் பா.கதிா்வேல், திருக்குறளின் தனித்தன்மைகளை காணொலிக் காட்சிகள் துணையோடு எடுத்துரைத்தாா். இதில் மாணவ, மாணவிகள், கௌரவ விரிவுரையாளா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ரா. இளவரசன் நன்றி தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...