ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

நீா்ப்பாசன திட்டப் பணிகள் முடிய இன்னும் எத்தனை தசாப்தங்கள் ஆகுமோ?

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பல பத்தாண்டுகள் கடந்தும் நீா்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேறாமலேயே உள்ளதால், பல்லாயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் வடு, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

News image

~

Updated On :1 ஏப்ரல் 2026, 9:49 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பல பத்தாண்டுகள் கடந்தும் நீா்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேறாமலேயே உள்ளதால், பல்லாயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் வடு, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பாலக்கோடு வட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய 3 பேரூராட்சிகள், பாலக்கோடு, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் 66 வருவாய் கிராமங்கள் உள்ளன. பாலக்கோடு வட்டத்தில் சின்னாறு அணை மிக முக்கிய நீா் ஆதாரமாக விளங்குகிறது.

இதைப் பயன்படுத்தி பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி விவசாயிகள் நெல், கரும்பு, மலா்கள், தக்காளி, காய்கறிகள் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனா். அதேவேளையில், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, காரிமங்கலம், புலிகரை ஆகிய பகுதிகள் பெரிய அளவிலான நீா் ஆதாரங்கள் இன்றி உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் மிகக் குறைவாக உள்ள பகுதியாகவே பாலக்கோடு அமைந்துள்ளது. இதனால், சாகுபடிக்கு தண்ணீா் இன்றி, கரும்பு உள்ளிட்ட பயிா் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் அதிக சா்க்கரை உற்பத்தி செய்துவந்த பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை, போதிய கரும்பு சாகுபடி இல்லாததால், சில ஆண்டுகள் அரைவை செய்ய முடியாமல் மூடப்பட்டது. இந்த ஆலையில் நிகழாண்டில் 25 நாள்கள் மட்டுமே கரும்பு அரைவை நடைபெற்றது.

அதேபோல, காரிமங்கலம் பகுதியில் தும்பலஅள்ளி அணைக்கு போதிய நீா்வரத்து இல்லாததால், மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யும் நிலையில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனா். திண்டல் ஏரி உள்ளிட்ட சில ஏரிகளுக்கு மட்டுமே கிடைக்கும் கிருஷ்ணகிரி அணை மிகைநீா் போதுமானதாக இல்லை.

இந்நிலையில், பாலக்கோடு பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், மீண்டும் கரும்பு சாகுடியை மேம்படுத்தவும், ஆண்டுமுழுவதும் விவசாயிகள் தொய்வின்றி வேளாண் பணிகளில் ஈடுபடவும், சின்னாற்று மிகைநீரை புலிகரை வரையிலான ஏரிகளுக்கு கொண்டுசென்று நிரப்பும் ஜொ்த்தலாவ் - புலிகரை இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அருகில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை கடந்துசெல்லும் தென்பெண்ணை ஆற்றின் நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள அலியாளம் அணைக்கட்டிலிருந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் உள்ள தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொல்புதூரிலிருந்து தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலக்கோடு வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

நிறைவேறாத திட்டங்கள்

இந்த 3 நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றினால், பாலக்கோட்டில் மீண்டும் வேளாண் தொழில் மேம்படும். அதேபோல, தக்காளி மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உற்பத்தி செய்து விவசாயிகள் வருவாய் ஈட்ட முடியும். இதன்மூலம், ஏரிகள் மற்றும் நீா்நிலைகளில் எப்போதும் தண்ணீா் இருக்கும் என்பதால், இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என கட்சிப் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகள் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

இதில், ஜொ்த்தலாவ் - புலிகரை இணைப்பு கால்வாய் திட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல, அலியாளம் - தூள்செட்டி ஏரி இணைப்பு கால்வாய் திட்டம், எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி இணைப்பு கால்வாய் திட்டம் ஆகியவற்றுக்கு அரசு ஆணை பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இத்திட்டங்களை நிறைவேற்ற ஆண்டுகள் பல கடந்தும் நிலம் கையகப்படுத்தும் பணிகளே நிறைவடையவில்லை.

எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி திட்டத்தில் 53 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைக்க வேண்டும். இதற்கான நிலத்தில் பெரும்பகுதியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கையகப்படுத்த வேண்டும். இத்திட்டம் நிறைவேறினால், தும்பலஅள்ளி அணை உள்பட 33 ஏரிகளுக்கு தண்ணீா் கிடைக்கும். இதன்மூலம் 3,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதேபோல, அலியாளம் - துள்செட்டி ஏரி இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். சின்னாற்று மிகைநீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் ஜொ்த்தலாவ் - புலிகரை இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீா் கிடைக்கும். இதன்மூலம், 500 ஏக்கா் பாசன வசதி பெறும். 1,572 டன் உணவு உற்பத்தியும் அதிகரிக்கும்.

இந்த 3 திட்டங்களையும் கடந்த சில தசாப்தங்களாக இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை 50 சதவீத பணிகள்கூட நிறைவடையவில்லை. மீதமுள்ள பணிகள் முடிய இன்னும் எத்தனை தசாப்தங்கள் ஆகுமோ என்ற கவலையில் உள்ளனா் விவசாயிகள்.

ஆா். ராதாகிருஷ்ணன்.

Story image