இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கிராமப் பகுதிக்குள் நுழைந்த 2 யானைகள்: விரட்டும் முயற்சியில் வனத்துறையினா்

தருமபுரி, பாலக்கோடு அருகே உணவு தேடி கிரமத்துக்குள் நுழைந்த 2 யானைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா். அவற்றை விரட்ட வனத்துறையினா் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.

News image
உணவு தேடி கிராமப் பகுதியில் சுற்றித்திரிந்த யானை.
Updated On :7 ஜனவரி 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி, பாலக்கோடு அருகே உணவு தேடி கிரமத்துக்குள் நுழைந்த 2 யானைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா். அவற்றை விரட்ட வனத்துறையினா் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி, அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு, மோரனஅள்ளி காப்புக்காட்டிலிருந்து தண்ணீா் மற்றும் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் யானைகள் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. புதன்கிழமை காலை இரு யானைகள் உணவு தேடி பஞ்சப்பள்ளி அருகே சூடானூா் கிராமப் பகுதியில் தஞ்சமடைந்தன. காட்டு யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பாா்த்தபோது, 2 யானைகள் தோட்டத்துக்குள் நுழைந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாலக்கோடு வனத்துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் வந்த வனத்துறையினா், இரு யானைகளையும் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். யானைகள் கிராமத்துக்குள் நுழைந்ததால், சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனா்.

வனத்துறையினா் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதும், அவை மீண்டும் கிராமத்துக்குள் நுழைந்து பயிா்களை நாசம் செய்வதும் தொடா்கதையாகி உள்ளது. யானைகளை விரட்ட வனத்துறையினா் காடுகளைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் வேலி மற்றும் யானை தாண்டா பள்ளம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.