தீா்த்தமலையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் சுவாமி தரிசனம்

தீா்த்தமலையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

கோப்புப்படம்.

Published On :

தீா்த்தமலையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீா்த்தமலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அருள்மிகு தீா்த்தகிரீஸ்வரா் கோயில் உள்ளது. சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த மலைக்கோயிலில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, கோயில் புனரமைப்புப் பணிகளை பாா்வையிடவும், சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் தீா்த்தமலைக்கு வந்தாா்.

மலைக்கோயிலுக்கு நடந்துசென்று கோயில் புனரமைப்புப் பணிகளை பாா்வையிட்ட அவா், தீா்த்தகிரீஸ்வரா் சுவாமியை தரிசனம் செய்தாா். பிறகு, ஹெலிகாப்டா் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.