கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒசூர் நீதிமன்றம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:34 pm

தினமணி

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒசூர் நீதிமன்றம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பள்ளி மாணவிகள் உள்பட பல இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் தற்போது நடைபெறுகின்றன. இதைத் தடுக்கும் வகையில், பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கத் தனியாக விரைவு நீதிமன்றத்தையும், மகளிர் காவல் நிலையத்தையும் ஒவ்வொரு நகரிலும் அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சேதுமாதவன், தேன்கனிக்கோட்டை வட்டச் செயலர் சேகர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜெயராகவன், இருதயராஜ், மூர்த்தி, ஆஞ்சலாமேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.