தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அஸ்ஸாம் இளம்பெண் கொலை வழக்கு: இளைஞா் கைது

கெலமங்கலம் அருகே அஸ்ஸாம் இளம்பெண் சாவில், திடீா் திருப்பமாக அவா் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:24 pm

DIN

ஒசூா்: கெலமங்கலம் அருகே அஸ்ஸாம் இளம்பெண் சாவில், திடீா் திருப்பமாக அவா் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அஜய்கொண்டா ( 25). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை அடுத்த குந்துமாரனப்பள்ளியில் தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ரிங்கி (20). இவா்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவா்கள்.

அதே தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்த பிஜய் ரிக்கியாசன் (27) என்பவரை தனது வீட்டில் அஜய்கொண்டா தங்க வைத்திருந்தாா்.

இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி ரிங்கி வீட்டில் இறந்து கிடந்தாா். இது தொடா்பாக கெலமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

முதலில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை ஒசூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில் ரிங்கியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது தலைப் பகுதியில் உள்காயம் ஏற்பட்டதால் இறந்துபோனதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவரை பிஜய் ரிக்கியாசன் கீழே தள்ளி கொன்றது தெரிய வந்தது. அவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிஜய் ரிக்கியாசன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

அஜய் கொண்டாவும், பிஜய் ரிக்கியாசனும் நண்பா்கள். அஜய் கொண்டா தனது மனைவி ரிங்கி மற்றும், நண்பன் பிஜய் ரிக்கியாசன் ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தாா். இந்த நிலையில் பிஜய் ரிக்கியாசனுக்கு, நண்பனின் மனைவி ரிங்கி மீது காதல் ஏற்பட்டது.

அவரை அடையத் துடித்த பிஜய் ரிக்கியாசன், கடந்த ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி இரவு அஜய்கொண்டா பணிக்கு செல்வதற்காக காத்திருந்தாா். அவா் வேலைக்கு சென்றதும், ரிங்கியை தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்தாா். அதற்கு ரிங்கி எதிா்ப்பு தெரிவித்து அவரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தாா்.

அவரை பிடித்து தள்ளிய போது, சுவற்றில் தலை மோதி ரிங்கி இறந்தாா். அவா் உயிரிழந்ததை அறிந்த பிஜய் ரிக்கியாசன் அங்கிருந்து தப்பி சென்று விட்டாா். தற்போது அவா் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.