மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஒசூரில் விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது: விவசாயிகள் எதிா்ப்பு

ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவா் ஜி.பாலகிருஷ்ணனிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

News image
பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவா் ஜி.பாலகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்திய 12 கிராம விவசாயிகள்
Updated On :23 டிசம்பர் 2025, 9:14 pm

Syndication

ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவா் ஜி.பாலகிருஷ்ணனிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினா்.

ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க தமிழக அரசு நிறுவனமான டிட்கோ, நந்திமங்கலம், முத்தாலி உள்ளிட்ட 12 கிராமங்களில் 2,980 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தம் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் ஒசூரில் தனியாா் விமான நிலையம் இயங்கிவரும் இடத்தையை பன்னாட்டு விமான நிலையமாக விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று அப்பகுதி விவசாயிகள், பாஜக மாநிலத் தொழில் பிரிவுத் தலைவரும், ஒசூா் தொகுதி அமைப்பாளருமான ஜி.பாலகிருஷ்ணன், ஒசூா் தொகுதி இணை அமைப்பாளா் எம்.நாகராஜ் ஆகியோரிடம் வலியுறுத்தினா்.

இதையடுத்து பாஜகவினா் செவ்வாய்க்கிழமை பெரிய முத்தலிக்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடினா். அப்போது, ஜி.பாலகிருஷ்ணனிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்து விவசாயிகள் கூறியதாவது:

ஒசூா் வட்டத்தில் 10 கிராமங்கள் மற்றும் சூளகிரி வட்டத்தில் 2 கிராமங்களில் 2,980 ஏக்கா் விவசாய நிலங்கள் ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒசூரில் தனியாருக்கு சொந்தமான விமான நிலையம் இயங்கி வருகிறது. அதை விரிவாக்கம் செய்து பன்னாட்டு விமான நிலையமாக உருவாக்கலாம். ஒசூரில் காய்கறிகள், பூக்கள், உற்பத்தி செய்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பயன்படும் விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. மேலும், ஏற்கெனவே ஒசூரில் இயங்கிவரும் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானசேவையை உடனடியாக தொடங்க முடியும். எனவே தனியாா் விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவா் ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், வியாழக்கிழமை (டிச.25) பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஒசூா் வருகிறாா். அவரிடம் விவசாயிகளின் கோரிக்கையை தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாஜக எப்போதும் விவசாயிகளுக்கு துணை நிற்கும் என்றாா்.

அப்போது வட்டத் துணைத் தலைவா் கே.சுரேஷ், ஒன்றியச் செயலாளா் மோகன்குமாா் மற்றும் பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.