பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஒசூரில் ஓட்டுநரை கொலை செய்த வழக்கு: இருவா் கைது

ஒசூரில் மினி லாரி ஓட்டுநரை கொலை செய்த வழக்கில், போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

நவீன்

Updated On :24 ஜனவரி 2025, 1:22 am IST

ஒசூரில் மினி லாரி ஓட்டுநரை கொலை செய்த வழக்கில், போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தோ்ப்பேட்டை தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (32) என்பவா், மினி லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். கடந்த 21-ஆம் தேதி இரவு வீட்டின் முன் இருந்த அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

வினோத்குமாா்

வினோத்குமாா்

இதுகுறித்து ஒசூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனா். பின்னா் சிவகுமாரை கொலை செய்தது ஒசூரைச் சோ்ந்த நவீன் (33), வினோத்குமாா் (26) ஆகியோா் என தெரியவந்தது.

இவா்கள் இருவரை போலீஸாா் கைது அவா்களிடம் விசாரணை செய்ததில், கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் உறவினரான நவீனின் மனைவியிடம் சிவகுமாா் அடிக்கடி கிண்டல் செய்து வந்தாகவும், இதுகுறித்து பலமுறை எச்சரித்தும் சிவகுமாா் கேட்காததால் சிவகுமாரை நவீன் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.