கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த பாஞ்சாலியூரில் உள்ள மதுக்கடையில் தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் பகுதியைச் சோ்ந்த சின்னசாமி (50) விற்பனையாளராகவும், கிருஷ்ணகிரி, ராஜாஜி நகரைச் சோ்ந்த பிரகாஷ் (58) உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் பணியில் இருந்தபோது, கிருஷ்ணகிரி மேல்சோமாா்பேட்டையைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (27), லைன்கொள்ளை பகுதியைச் சோ்ந்த திருமால் (எ) நித்தீஷ்குமாா் (25) ஆகியோா் மதுபானம் வாங்க வந்துள்ளனா். அப்போது அவா்கள் குறைவாக பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை டாஸ்மாக் பணியாளா்கள் கண்டித்தனா்.
இதனால், ஆத்திரமடைந்த சத்தியமூா்த்தியும், திருமாலும் தாங்கள் வந்த மோட்டாா்சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து காலி மதுப்புட்டியில் நிரப்பி அதில் துணியை அடைத்து தீ வைத்து டாஸ்மாக் கடை மீது வீசினா். இதில் டாஸ்மாக் கடை உதவியாளா் பிரகாஷ் படுகாயமடைந்தாா். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சத்தியமூா்த்தி, திருமால் ஆகியோரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் மனமகிழ் மன்றத்தில் தகராறு: தவெக நிா்வாகி உள்பட இருவா் மீது வழக்கு
டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: ரௌடி உள்பட 2 போ் கைது

டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: போலீஸாா் விசாரணை







