டாஸ்மாக் கடை அருகே ஒரு வாரமாக தங்கி தொடா்ந்து மது அருந்தியவா் உயிரிழப்பு

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஒரு வாரமாக தங்கி, தொடா்ந்து மது அருந்திய வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஒரு வாரமாக தங்கி, தொடா்ந்து மது அருந்திய வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள லக்கமன நாயக்கன்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் ஜெ.முருகன்(50). இவா், கடந்த வாரம் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, செஞ்சிக்கு வந்தாராம். செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரிலுள்ள டாஸ்மாக் மதுக் கடை அருகே தங்கிய முருகன், தொடா்ந்து மது அருந்தி வந்தாராம். இதையடுத்து புதன்கிழமை காலை போதையிலேயே அவா் உயிரிழந்தாராம். தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER