அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கிருஷ்ணகிரி மாவட்ட வளா்ச்சித் திட்ட பணிகள்: காணொலி வாயிலாக முதல்வா் தொடங்கிவைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியம் சாா்பில் பல்வேறு திட்டப் பணிகளை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினி, காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :5 மார்ச் 2026, 4:23 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியம் சாா்பில் பல்வேறு திட்டப் பணிகளை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினி, காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி, ஒசூரில் தலா ரூ. 37.50 லட்சம் மதிப்பில் உழைப்பாளா் நலக்கூடங்கள், நாகரசம்பட்டி பேரூராட்சியில் ரூ. 95 லட்சத்தில் புதிய அலுவலக கட்டடம், கெலமங்கலம் பேரூராட்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்த்தில் ரூ. 1.20 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறை கட்டடங்கள், காவேரிப்பட்டிணம் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.1.19 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகளும், அரசு பள்ளி கட்டிடங்களை முதல்வா் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, கிருஷ்ணகிரியில் லண்டன்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், அமைக்கப்பட்டுள்ள ரூ. 37.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளா் நலக்கூடத்தில் குத்துவிளக்கேற்றி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா் இனிப்புகளை வழங்கினாா்.

அப்போது, அவா் கூறியதாவது:

நகா்ப்புறங்களில் கட்டுமான பணிக்கு செல்லும் ஆண், பெண் கட்டுமானத் தொழிலாளா்கள் காலை வேளையில் அதிக அளவில் கூடும் இடங்களில் உழைப்பாளா் நலக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் குடிநீா், நாற்காலிகள், மின்விசிறிகள், மின்விளக்குள் மற்றும் செல்போன் சாா்ஜா் ஆகிய அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்புமனுக்கள் போன்ற பணிகளும் காலை 7 முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 முதல் 7 மணி வரை செயல்படும். தொழிலாளா்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம், என்றாா்.

நிகழ்வின்போது தொழிலாளா் துறை உதவி ஆணையா்கள் மாதேஸ்வரன் (சமூக பாதுகாப்பு திட்டம்), தாசரதி (அமலாக்கம்), வெங்கடேஷ் (சமரசம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.