கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வாராந்திர ரயில்களை ராசிபுரத்தில் நிறுத்த எம்.பி. கோரிக்கை

நாமக்கல் வழியாக இயக்கப்படும் 2 வாராந்திர ரயில்கள் ராசிபுரத்தில் நின்று செல்ல வேண்டும் என நாமக்கல் எம்.பி.   பி. ஆர்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். 

News image
Updated On :1 மார்ச் 2018, 1:32 am

DIN

நாமக்கல் வழியாக இயக்கப்படும் 2 வாராந்திர ரயில்கள் ராசிபுரத்தில் நின்று செல்ல வேண்டும் என நாமக்கல் எம்.பி.   பி. ஆர்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷேரஸேதாவிடம் சென்னையில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:  சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், கரூர் வழியாக நாகர்கோவில் வரை செல்லும் விரைவு ரயில்,  ஓகாவிலிருந்து சேலம், நாமக்கல், கரூர் வழியாக ராமேஸ்வரம் வரை செல்லும் வாராந்திர ரயில்கள் இயங்கி வருகின்றன. 
ஆனால் இந்த இரண்டு ரயில்களும் ராசிபுரத்தில் நிறுத்தப்படுவதில்லை, இங்கு ரயிலில் செல்வோர் ஏராளமானோர் உள்ளதால், இந்த வாராந்திர ரயில்களை ராசிபுரத்தில் நிறுத்தி செல்ல நடவடிக்கையெடுக்க வேண்டும். 
இதுபோல், கரூர்-சேலம்,  சேலம்-கரூர் பயணிகள் ரயில் சில நாள்களாக புதுச்சத்திரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை.  இதனால் பயணிகள் களங்காணி அல்லது ராசிபுரம் செல்ல வேண்டியுள்ளது.  இந்த ரயில்களை புதுச்சத்திரத்தில் தொடர்ந்து நிறுத்தவும்,  பயணச்சீட்டு வழங்க ஊழியரை நியமிக்கவும் வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.