இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு விவரங்கள் சமர்ப்பிப்பு

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் வருகைப்பதிவேடு விவரங்கள் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட கல்வி அலுவலரிடம்

News image
Updated On :12 ஜூன் 2020, 9:10 am

DIN

நாமக்கல்: நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் வருகைப்பதிவேடு விவரங்கள் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட கல்வி அலுவலரிடம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்குகளால் அரசு தேர்வை ரத்து செய்ததுடன் அனைத்து மாணவ மாணவியரும் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அடிப்படையிலும் வருகை அடிப்படையிலும் மதிப்பெண்களை தயார் செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் உள்ள 303 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மாணவ மாணவியரின் வருகைப்பதிவேடு விவரங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் அவற்றை பெற்றார். 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 மார்ச் 16 ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 வகுப்பு விடுபட்ட தேர்வு எழுத இருந்த மாணவ மாணவியருக்கு பிப்ரவரி 12ஆம் தேதி வரையிலும் வருகை பதிவு பெறப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தவிர்த்து பிற ஆசிரியர்கள் இதில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.