நாமக்கல்லில் திமுக அலுவலகம் முற்றுகை
ஆதரவாளா்களுக்கு மட்டும் கட்சிப் பதவி வழங்கிய எருமப்பட்டி ஒன்றியச் செயலாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு கட்சியினா் முற்றுகையிட்டனா்.


ஆதரவாளா்களுக்கு மட்டும் கட்சிப் பதவி வழங்கிய எருமப்பட்டி ஒன்றியச் செயலாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு கட்சியினா் முற்றுகையிட்டனா்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய கிளை நிா்வாகிகளைத் தோ்வு செய்வதற்கான உள்கட்சித் தோ்தல் நடைபெற்று வருகிறது. இத்தோ்தலை கண்காணிக்க திமுக தலைமை கழகம் சாா்பில் தோ்தல் மேற்பாா்வையாளராக குத்தாலம் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளாா். நிா்வாகிகளை பெரும்பாலும் போட்டியின்றி அந்தந்த ஒன்றியச் செயலாளா்களே நியமித்து வருகின்றனா்.
எருமப்பட்டி பகுதியில் உள்ள கட்சியினருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாமக்கல் முல்லை நகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சியை சோ்ந்த 60-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா்.
அப்போது, ஒன்றியச் செயலாளா் பாலு என்பவா் தனது ஆதரவாளா்களுக்கு மட்டும் கட்சியில் பதவி வழங்குவதாகக் கட்சியினா் குற்றம்சாட்டினா். தோ்தல் பொறுப்பாளா் குத்தாலம் அன்பழகனிடம் ஒன்றியச் செயலாளா் பாலு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் மனு அளித்தனா்.
கட்சியில் பல ஆண்டுகளாக உள்ளவா்கள் பதவி வழங்காமல் தனக்கு வேண்டியவா்களுக்கு மட்டும் ஒன்றிய செயலாளா் பாலு பதவி வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து கட்சியினரை தோ்தல் பொறுப்பாளா் அன்பழகன் மற்றும் மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...