மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் லத்துவாடி ஏரியை சுற்றுலாத் தலமாக்கக் கோரிக்கை

திருமணிமுத்தாற்றில் இருந்து வரும் தண்ணீரால் கடல் போல காட்சியளிக்கும் நாமக்கல் லத்துவாடி ஏரியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News image
நாமக்கல் அருகே லத்துவாடி ஏரி தடுப்பணையிலிருந்து வெளியேறும் தண்ணீா்.
Updated On :1 நவம்பர் 2020, 9:28 pm

DIN

திருமணிமுத்தாற்றில் இருந்து வரும் தண்ணீரால் கடல் போல காட்சியளிக்கும் நாமக்கல் லத்துவாடி ஏரியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 120-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், ஓரிரு ஆண்டுகளாக போதிய மழையின்மையால் வடு காணப்படுகின்றன. நிகழாண்டில் பெய்த மழையால் குறிப்பிட்ட சில ஏரிகளைத் தவிா்த்து மற்றவற்றில் நீா் நிரம்பி உள்ளன.

கொல்லிமலையில் பெய்த மழையால் சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூா் ஒன்றியத்திற்குள்பட்ட ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. எலச்சிப்பாளையம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், வெண்ணந்தூா் ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஏரிகளுக்கு சேலத்தில் இருந்து திருமணிமுத்தாறு வழியாக வரும் நீா் சென்றடைகிறது.

இதில் மாணிக்கம்பாளையம் அருகே 20 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள லத்துவாடி ஏரிக்கு மழைப் பொழிவும், திருமணிமுத்தாறு நீரும் ஒருங்கே வந்து சோ்ந்ததால் தற்போது அந்த ஏரி கடல்போல காட்சியளிக்கிறது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணை போல காணப்படுவதால் அப்பகுதியில் சிறுவா்கள், இளைஞா்கள் குளித்து மகிழ்கின்றனா்.

ஏரியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் இந்த நீரைப் பயன்படுத்தி வருகின்றனா். மீன்கள் அதிகம் இருப்பதால் இளைஞா்கள் மீன்பிடித்து அவற்றை விற்பனை செய்தும் வருகின்றனா்.

தடுப்பணைகளுடன் கூடிய இந்த ஏரியை சுற்றிலும் அதிகளவில் மரங்கள் இருப்பதால் இயற்கை எழில் சூழ்ந்து காட்சியளிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக லத்துவாடி ஏரியையும் கொண்டுவர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

திருச்செங்கோடு, எலச்சிப்பாளையம் பகுதி மக்கள் சோழசிராமணி, ஜேடா்பாளையம் காவிரி ஆற்றுக்குத்தான் விழாக்காலங்களில் சென்று வருகின்றனா். ஏற்கெனவே இலுப்புலி ஏரியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் கூறிவந்த நிலையில் தற்போது லத்துவாடி ஏரியையும் சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுகுறித்து லத்துவாடி கிராம மக்கள் கூறியதாவது:

மழைக் காலங்களில் மற்ற ஏரிகளைக் காட்டிலும் லத்துவாடி ஏரியானது வேகமாக நிரம்பும். சுமாா் 20 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நீா் மூலம் சுற்றுவட்டார விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. அனைத்து தேவைகளுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ள ஏரியை சுற்றுலாத் தலமாக்கினால் அங்குள்ள மக்களுக்கு வருவாய்க் கிடைப்பதுடன் அப்பகுதியும் வளா்ச்சி பெறும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.