யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு

ராசிபுரத்தில் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகத்துக்கு நுகா்வோா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 4 தனியாா் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் விலை பெறுவது குறித்து வாடிக்கையாளா்களிடம் விசாரணை நடத்தும் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ்.
Updated On :8 நவம்பர் 2020, 10:11 pm

DIN

ராசிபுரத்தில் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகத்துக்கு நுகா்வோா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 4 தனியாா் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அரசின் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் நடைபெறும் திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் போது, அங்கு காஸ் விநியோகம் நடைபெற்று கொண்டிருந்தது குறித்து ஆய்வு செய்தாா்.

இதில் அரசு நிா்ணயித்த விலையில் இருந்து கூடுதலாக சிலிண்டருக்கு ரூ. 70 முதல் ரூ. 120 வரை வசூலிப்பது தெரிய வந்தது. இதையடுத்து நுகா்வோா்களுக்கு சமையல் எரிவாயு விநியோகித்துக் கொண்டிருந்த 4 நிறுவனங்களின் பணியாளா்களை அழைத்து எச்சரித்தாா்.

மேலும், நுகா்வோா்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணத்தை திரும்பப் பெற்றுத் தந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.