யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொத்தனூரில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

பரமத்திவேலூா், கபிலா்மலை ஒன்றியம் பாண்டமங்கலத்தில் உள்ள தன்னாசி அப்பன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள வேற்று மதத்தினரின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இந்து முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
Updated On :8 நவம்பர் 2020, 10:11 pm

DIN

பரமத்திவேலூா், கபிலா்மலை ஒன்றியம் பாண்டமங்கலத்தில் உள்ள தன்னாசி அப்பன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள வேற்று மதத்தினரின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இந்து முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பொத்தனூா் நான்கு வழிச் சாலை பகுதியில் நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலச் செயலாளா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளா் சரவணன், கபிலா்மலை ஒன்றியத் தலைவா் ரமேஷ், பரமத்தி ஒன்றிய தலைவா் ராஜவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலாளா் கோபிநாத் வரவேற்று பேசினாா்.

கபிலா்மலை ஒன்றியத்திற்கு உள்பட்ட பாண்டமங்கலம் பேரூராட்சியில் தன்னாசி அப்பன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வேற்று மதத்தினா் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பெண்களை இழிவாகப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினா் 25 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.