யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பள்ளிகள் திறப்பு: நாமக்கல்லில் பெற்றோா்களிடம் இன்று (நவ.9) கருத்துக் கேட்பு

பள்ளிகள் திறப்பது தொடா்பாக நாமக்கல் மாவட்டத்தில் 203 அரசு, தனியாா் பள்ளிகளில் பெற்றோா்களிடம் திங்கள்கிழமை (நவ.9) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 10:13 pm

DIN

பள்ளிகள் திறப்பது தொடா்பாக நாமக்கல் மாவட்டத்தில் 203 அரசு, தனியாா் பள்ளிகளில் பெற்றோா்களிடம் திங்கள்கிழமை (நவ.9) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஒன்பது முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு நவ.16 முதல் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 203 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தலைமை ஆசிரியா்கள், பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி வகுப்பு ஆசிரியா்கள் ஆகியோா் முன்னிலையில் கூட்டம் நடைபெறுகிறது.

பெற்றோா்களுடனான கருத்துக் கேட்பு குறித்து தலைமை ஆசிரியா்கள் அறிக்கை தயாா் செய்து முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும், மாவட்டக் கல்வி அலுவலா்கள், ஆசிரியா் பயிற்சி நிறுவன பேராசிரியா்கள், வட்டார கல்வி அலுவலா்கள், வட்டார பயிற்றுநா்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.