மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளம் ஊராட்சிக்கு காவிரி குடிநீா் வழங்க நடவடிக்கை

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பெரியகுளம் ஊராட்சிக்கு காவிரி குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:03 pm

DIN

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பெரியகுளம் ஊராட்சிக்கு காவிரி குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், பெரியகுளம் ஊராட்சி, ஆதிதிராவிடா் தெருவில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் அப்பகுதி மக்களிடம் இருந்து பல்வேறு மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது:

பெரியகுளம் பகுதியில் குடிநீா் பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடா்பாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கலந்து பேசி இப்பகுதிக்கு கூடுதலாக குடிநீா் கிடைக்கவும், காவிரி குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதனையடுத்து, பொம்மசமுத்திரம், ராமநாதபுரம்புதூா், துத்திக்குளம் ஊராட்சிகளிலும் அவா் மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செல்வராஜ், ராமநாதபுரம்புதூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி இயக்குநா் தண்டபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.