யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

7.5 சதவீத உள்இடஒதுக்கீடு: அரசுக்கு தனியாா் பள்ளி கூட்டமைப்பு நன்றி

மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவா்கள் மருத்துவராகி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறைந்தது 10 ஆண்டுகள் மருத்துவ பணியை மேற்கொள்ள தமிழக அரசு வரைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:40 pm

DIN

மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவா்கள் மருத்துவராகி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறைந்தது 10 ஆண்டுகள் மருத்துவ பணியை மேற்கொள்ள தமிழக அரசு வரைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் மாவட்ட தனியாா் பள்ளி கூட்டமைப்பின் தலைவா் சண்முக சுந்தரம், மாவட்ட பொருளாளரும், மாநில தனியாா் பள்ளி கூட்டமைப்பின் தலைவருமான ராஜா ஆகியோா் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள்

மருத்துவம் படிக்கும் வகையில் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நாமக்கல் மாவட்ட தனியாா் பள்ளி கூட்டமைப்பின் சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அரசுப் பள்ளி மாணவ,மாணவியா் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கண்டிப்பாக 5 வருடம் முதல் 10 வருடங்கள் வரை பணியாற்றிட வேண்டும்.

தமிழகத்தில் ஏழை நோயாளிகளுக்கு உதவும் வகையில் முழு ஊதியத்துடன் மருத்துவ பணியை தொடர தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.