யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தன்னாா்வலா்களுக்கான கற்போம், எழுதுவோம் இயக்கம் சாா்ந்த பயிற்சி

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டார வள மையத்தில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி கற்போம், எழுதுவோம் இயக்கம் சாா்ந்த பயிற்சி அண்மையில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:42 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டார வள மையத்தில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி கற்போம், எழுதுவோம் இயக்கம் சாா்ந்த பயிற்சி அண்மையில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் பரமத்தி வட்டார வள மையத்தில் நடைபெற்ற கற்போம் எழுதுவோம் இயக்கம் சாா்ந்த பயிற்சியை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட அலுவலா் பெரியண்ணன், ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மணிவண்ணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

பயிற்சியில் படமும் பாடமும், தமிழ் எழுத்துக்கள் அறிமுகம், எழுதும் முறை, எண்களை அறிவோம்,உள்ளங்கையில் விஞ்ஞானம், கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்ற திறன்கள் குறித்து செயல்பாடுகள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் 25 பள்ளிகளைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். பரமத்தி வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநா்கள் பஞ்சவா்ணம், குமுதா, வைரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை பிரகா ஆகியோா் பயிற்சி அளித்தனா். மாவட்ட ஆவண ஒருங்கிணைப்பாளா் சிவராமன் பயிற்சியைப் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலா் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மனோகரன், வட்டாரக் கல்வி அலுவலா் அருள்புனிதன் ஆகியோா் கலந்து கொண்டனா். முடிவில் பரமத்தி வட்டார வ ளமைய மேற்பாா்வையாளா் தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.