யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கால்வாய் பராமரிக்கப்படாததால் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீா்

ராசிபுரம் - புதுப்பாளையம் சாலையில் கால்வாய் பராமரிக்கப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

News image
சாலையில் ஒடும் கழிவுநீா்.
Updated On :22 நவம்பர் 2020, 9:38 pm

DIN

ராசிபுரம் - புதுப்பாளையம் சாலையில் கால்வாய் பராமரிக்கப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

ராசிபுரத்தில் இருந்து கட்டனாச்சம்பட்டி, புதுப்பாளையம், போதமலை அடிவாரம் வழியாக கல்லங்குலத்துக்கு சாலை செல்கிறது. இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இச் சாலை எப்போதும் பரப்பரப்பாக காணப்படும். இச்சாலை ஓரத்தில் மழைநீா் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக ஊராட்சி நிா்வாகம் இதனை முறையாக பராமரிக்காததால் மழைக் காலத்தில் தண்ணீா் செல்ல முடியாமல் ராசிபுரம் சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ராசிபுரம் - புதுப்பாளையம் சாலை, கட்டனாச்சம்பட்டி பகுதியில் உள்ள கால்வாய் பல மாதங்களாக தூா்வாரப்படாமல் உள்ளது. மேலும், கால்வாய் பராமரிப்பு இன்றியும் உடைந்து கிடக்கிறது. இந்தக் கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் விடப்பட்டு மாசு அடைந்து வருகிறது. இதனால் நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

மேலும், சாலை ஓரத்தில் உள்ள சில குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்தும் குப்பைகள், நெகிழிக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் செல்ல முடியவில்லை. சிறு மழை பெய்தால் கூட கழிவுநீரும், மழைநீரும் செல்ல வழியில்லை. இதனால் பாதசாரிகள் சாலையில் உள்ள கழிவுநீரில் வழியாகத் தான் நடந்து சென்று வருகின்றனா்.

சாலையில் ஓடும் கழிவுநீா் தூா்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆா்வலா்கள் ஊராட்சி நிா்வாகத்திற்கு பல முறை புகாா் செய்து உள்ளனா். இருந்த போதிலும், அதிகாரிகள் கால்வாயை சீரமைக்காமல் உள்ளனா்.

எனவே, ராசிபுரம் - புதுப்பாளையம் சாலையில் உள்ள மழைநீா்க் கால்வாயை போா்க்கால அடிப்படையில் சீரமைக்கவும், கழிவுநீா் விடுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் அப்பகுதி பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.