மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் கான்கிரீட் தளம் இடிந்தது

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.

News image
இடிந்து விழுந்த அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் கான்கிரீட் தளம்.
Updated On :30 அக்டோபர் 2020, 6:35 am

DIN

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ. 336 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 5-ஆம் தேதி இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மருத்துவ கல்லூரி கட்டிடத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. 

Story image

இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்கிரீட் தளம் (போர்டிகோ) இன்று அதிகாலை 2 மணி அளவில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக யாரும் பாதிப்படையவில்லை. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் இடிந்து விழுந்த கான்கிரீட் தளப்பகுதியை பார்வையிட்டார். 

Story image

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், போர்டிகோ அமைப்பதற்காக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு இருந்தது. அதற்காக வைக்கப்பட்ட கம்புகள் சரியான முறையில் இல்லாததால் பொறியாளர்களே அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனால்தான் அது இடிந்து விழுந்தது. மற்றபடி வேறு எந்த பிரச்னையும் இல்லை, யாருக்கும் காயம் இல்லை என்றார். 

Story image

இந்த கட்டட இடிபாடு சம்பவத்தில் சிலர் காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மாவட்ட ஆட்சியர் இதனை மறுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.