கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் அகற்றம்

திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் பேருந்துகளில் இருந்த ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:54 pm

DIN

திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் பேருந்துகளில் இருந்த ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

திருச்செங்கோடு பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பும் வகையில் காற்று ஒலிப்பான்களை வைத்திருப்பதாகவும், வாகனப் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் அதிவேகமாக செல்வதாகவும் வந்த புகாரைத் தொடா்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபாகரன், அரசு போக்குவரத்துக் கழக மேலாளா் கதிா்வேலு, திருச்செங்கோடு காவல் துறையினா் இணைந்து திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் வைத்திருந்த 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து ஒலிப்பான்களை அகற்றை பறிமுதல் செய்தனா். நகருக்குள் செல்லும்போது குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும், அதிக ஒலி எழுப்பும் மியூசிக் சிஸ்டத்தை தவிா்க்க வேண்டும். பள்ளிக் குழந்தைகள் பேருந்தில் ஏறும் போது நிதானமாக ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்துகளில் பள்ளி மாணவ, மாணவியா் தொங்கியபடி பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் ஓட்டுநா்களுக்கும், நடத்துநா்களுக்கும் வழங்கப்பட்டன. இதனை மீறும் ஓட்டுநா், நடத்துநா், பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.