யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜன. 2-இல் ஆஞ்சனேயர் ஜெயந்தி: 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி தொடக்கம்

நாமக்கல்லில் ஆஞ்சனேயர் ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளை கொண்டு வடைமாலை அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதற்காக வடைகளை தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் அன்னதான மண்டபத்தில் புதன்கிழமை வடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அர்ச்சகர்கள்.
Updated On :29 டிசம்பர் 2021, 5:27 am

DIN

நாமக்கல்: நாமக்கல்லில் ஆஞ்சனேயர் ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளை கொண்டு வடைமாலை அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதற்காக வடைகளை தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலில், 18 அடி உயரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் ஆஞ்சனேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து 8 வடைகளை கொண்ட மாலை சுவாமிக்கு சாத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு வரும் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் அன்னதான மண்டபத்தில் தொடங்கியது. கோயில் உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் அய்யர் தலைமையில் 32 பேர் கொண்ட குழுவினர் வடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்கள் தொடர்ந்து 7-ஆம்  ஆண்டாக நாமக்கல் ஆஞ்சனேயருக்கு வடை மாலையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 2,050 கிலோ உளுந்த பருப்பு மாவு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120 கிலோ உப்பு, 900 லிட்டர் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு வடைகளை தயாரித்து வருவதாகவும் கூறினர்.

இதுகுறித்து ஆஞ்சனேயர் கோயில் உதவி ஆணையர் ரமேஷ் கூறியதாவது:-

வடைகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். 1-ஆம் தேதி (சனிக்கிழமை) வடையை மாலையாக கோர்க்கும் பணி நடைபெறும். அன்று நள்ளிரவு முதல் நாமக்கல் ஆஞ்சநேயர் சாமிக்கு வடை மாலை சாத்தப்படும். வருகிற 2-ஆம் தேதி  1 லட்சத்து 8 வடை மாலையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு வடை பிரசாதமாக வழங்கப்படும் என்றார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.