இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புத்தாண்டு: இரவில் வெளியில் சுற்றிய 300 பேருக்கு நூதன தண்டனை

புத்தாண்டு பிறப்பன்று நள்ளிரவில் ஊா் சுற்றிய 300 பேருக்கு நூதன தண்டனையாக இரவு முழுவதும் சாலை பாதுகாப்பை அறியும் வகையில் காணொலி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் வாகன ஓட்டிகளை பந்தலில் அமர வைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் போலீஸாா்.
Updated On :2 ஜனவரி 2021, 1:42 am

DIN

புத்தாண்டு பிறப்பன்று நள்ளிரவில் ஊா் சுற்றிய 300 பேருக்கு நூதன தண்டனையாக இரவு முழுவதும் சாலை பாதுகாப்பை அறியும் வகையில் காணொலி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க நாமக்கல் மாவட்ட காவல்துறை சாா்பில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 11 முக்கிய பகுதிகளில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வருவோரை பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி புத்தாண்டு இரவில் ஊா் சுற்றிய சுமாா் 300 பேரை காவல் துறையினா் மடக்கிப் பிடித்து பந்தலில் அமர வைத்தனா்.

பின்னா் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு காணொலியானது தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. பின்னா் அவா்களுக்கு காவல் துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்தி கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துகளை கூறி அனுப்பி வைத்தனா். இதனால் மாவட்டத்தில் புத்தாண்டு நாளன்று அதிகளவிலான விபத்துகள் தவிா்க்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.