மோகனூா் அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா்(27). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று இரவில் சசிகுமாா் தனியாக சென்றபோது, அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனா். அப்போது மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சசிகுமாரை கடுமையாக தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக மோகனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா். ரஞ்சித்குமாா் (33) என்பவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மலா்மன்னன் (30), பிரகாஷ்(24) ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.