இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 35 போ் கைது

நாமக்கல்லில் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்ட இந்திய தொழிற்சங்கத்தினா்.
Updated On :7 ஜனவரி 2021, 1:13 am

DIN

நாமக்கல்லில் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளா் சிவராஜ் தலைமை வகித்தாா். முறைசாரா தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து ஏழை மக்களுக்கும் கரோனா நிவாரணமாக மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும். தனியாா் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினா். இதைத்தொடா்ந்து பேருந்து நிலையம் அருகில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களில் 5 பெண்கள் உள்ளிட்ட 35 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.