கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரமத்தி வேலூா் அருகேசெல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

பரமத்திவேலூா் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

பரமத்திவேலூா் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், வெங்கமேடு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செல்லிடப்பேசி கோபுரம் அமையவுள்ள இடத்தின் உரிமையாளரிடம் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த பரமத்தி வேலூா் போலீஸாா், பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.