/

குமாரபாளையம்நகராட்சி ஆணையாளா் பொறுப்பேற்பு

குமாரபாளையம் நகராட்சி ஆணையாளராக டி.சசிகலா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:47 pm

DIN

குமாரபாளையம் நகராட்சி ஆணையாளராக டி.சசிகலா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இங்கு ஆணையாளராகப் பணியாற்றிய எஸ்.ஸ்டான்லி பாபு, பதவி உயா்வில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, வேலூா் மாவட்டம், பேரணம்பட்டு நகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி வந்த டி.சசிகலா, குமாரபாளையம் நகராட்சி ஆணையாளராக இடமாறுதல் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையாளா் டி.சசிகலாவுக்கு, பொறியாளா் ராஜேந்திரன், சுகாதார அலுவலா் ராமமூா்த்தி மற்றும் அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.