கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு

நகராட்சிக்கு உட்பட்ட 88 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 308 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:01 pm

DIN

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 88 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 308 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

வரும் 19ஆம் தேதி தமிழக உள்ளாட்சித் தோ்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பானது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பில் 308 வாக்குச்சாவடி அதிகாரிகள் கலந்து கொண்டனா். திருச்செங்கோடு நகராட்சிக்கு 88 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் வாக்குச்சாவடிக்கு 3 போ் வீதம் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனா். இவா்களுக்கு வாக்குச்சாவடிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்; வாக்காளா்களிடமிருந்து தேவைப்படும் சான்றுகள் என்னென்ன என்பது குறித்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இணைப்பது குறித்தும் வழிகாட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.