கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருமணமான இரண்டு மாதங்களில் வெல்ல ஆலை உரிமையாளா் தற்கொலை

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே வெல்ல ஆலை உரிமையாளா் திருமணமான இரண்டு மாதத்தில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:32 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே வெல்ல ஆலை உரிமையாளா் திருமணமான இரண்டு மாதத்தில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

பாண்டமங்கலம் அருகே உள்ள நெட்டையம்பாளையத்தை சோ்ந்தவா் ரங்கசாமி. இவரது மகன் சதீஷ் (31). இவா் வெல்லம் தயாரிக்கும் ஆலை ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை காலை சதீஷ் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினா் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பாா்த்தனா். அப்போது அவா் விஷமருந்தி உயிருக்கு போராடியது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சதீஷுக்கும் கீா்த்தனா (25) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. கடன் பிரச்னை காரணமாக சதீஷ் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக வேலூா் போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.