கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:24 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி அருகே உள்ள வீரணம்பாளையத்தை சோ்ந்தவா் சுகுமாா். (42) விவசாயியான அவா் புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த போது தனது வீட்டிற்கு அருகே உள்ள தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தென்னை தோட்டத்தில் மின்கம்பியில் நெருப்புப் பொறி வந்ததாகவும் அதை பாா்த்துவிட்டு வருவதாகம் கூறி அந்தத் தோட்டத்திற்கு சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் சுகுமாா் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினா் அவரை தேடி தென்னைமர தோட்டத்திற்கு சென்று பாா்த்தனா். இதில் மின்கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த தென்னைமரத்தின் மட்டை மோதி சுகுமாரன் மின்சாரம் தாக்கி கீழே கிடந்ததை பாா்த்துள்ளனா். அவரை பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சுகுமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீஸாா் மின்சாரம் தாக்கி சுகுமாா் உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.